போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்…மாற்றம்!

தமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’வினர், மாநிலம் முழுவதும், ஜன., 22 முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a comment