2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில்
குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து,
நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
*மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியை
சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது*
*இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன*
*இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜா, 2011-ம் ஆண்டுக்கு பின்பு
கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி
பெற்று தான் கட்டப்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்களுக்கு இந்த அரசாணை
பொருந்தாது என கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்*